Tuesday 7 July 2020

பப்ஜி ஓர் பேராபத்து!

*பப்ஜி ஓர் பேராபத்து!*

😱😱😱


'அப்படி என்ன டா பாத்த'... '16 லட்சத்தை காணோம்'... 'ஆன்லைன் கிளாஸ்க்கு மொபைல் கொடுத்த தாய்'... சிறுவனின் பதிலால் ஆடிப்போன மொத்த குடும்பம்!
பையனின் படிப்பிற்காகத்  தாய் மொபைலை கொடுத்த நிலையில், கணவரின் மொத்த சேமிப்பான 16 லட்சத்தை இழந்து கொண்டு நிற்கிறார். கோபத்தில் தந்தை எடுத்த முடிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரின் 17 வயது மகன் பள்ளியில் படித்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பல பள்ளிகள் வகுப்புகளை ஆன்லைனில் நடத்தி வருகிறது. இதனால் அந்த மாணவனும் ஆன்லைன் வகுப்பு இருக்கிறது எனக் கூறி தனது அம்மாவின் ஸ்மார்ட்போனை கேட்டுள்ளார். அவரும் மகன் படிப்பிற்காக தானே கேட்கிறான் எனக் கூறி போனை கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த சிறுவன் பல மணி நேரம் மொபைல் போனிலேயே நேரத்தைக் கழித்துள்ளார். இதனைக் கவனித்த அந்த சிறுவனின் தந்தை ஏன் எப்போதும் மொபைலும், கையுமாக இருக்கிறாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் நான் ஆன்லைன் வகுப்பில் படித்து கொண்டு இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் சிறுவனின் தந்தை எதேச்சையாகத் தனது வங்கிக் கணக்கைச் சோதனை செய்துள்ளார். அப்போது எதிர்காலத்திற்காகத் தான் சேமித்து வைத்திருந்த 16 லட்ச ரூபாய் துடைத்து எடுக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்.
தனது மொத்த சேமிப்பும் காலியானது குறித்து தனது மகனிடம் விசாரித்துள்ளார். அப்போது தான் அந்த உண்மை வெளியில் வந்தது. ஆன்லைன் கிளாஸ் இருக்கிறது என்று மொபைலை வாங்கிய சிறுவன், பப்ஜி கேம்-ஐ விளையாடி வந்துள்ளார்.  அடுத்தடுத்த கட்டங்களை எட்டவும், புதிய அப்கிரேடுகளை செய்யவும் அவர் தனது பெற்றோரின் மூன்று வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறாக, ரூ.16 லட்சத்தை அந்தச் சிறுவன் செலவழித்துள்ளார். வங்கியிலிருந்து வந்த மெசெஜ்களை பெற்றோருக்குத் தெரியாமல் உடனே அந்த சிறுவன் அழித்துள்ளார்.
இந்த பதிலைக் கேட்டு மொத்த குடும்பமும் ஆடிப் போனது. என்ன செய்வது எனத் தெரியாமல், சிறுவனின் தந்தை காவல்நிலையத்திற்கு ஓடினார். நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார், கேமில் இழந்த பணத்தை மீட்பது என்பது கடினம் எனக் கூறினார்கள். தான் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை இப்படிச் சீரழித்து விட்டானே எனக் கதறிய தந்தை, கோபத்தில் மகனை இருசக்கர வாகனங்கள் சீர் செய்யும் மெக்கானிக் கடையில் சேர்த்து விட்டுள்ளார்.
தொழில்நுட்பம் வளர வளரப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் கையில் ஸ்மார்ட் போனோ அல்லது கணினியோ இருந்தால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளைச் சரியாகக் கண்காணிக்காமல் விட்டால் என்ன ஒரு ஆபத்தில் முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

Monday 29 June 2020

அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா

"அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா ?
என்ன ஜான் சொல்றே ?"

"ஆமா. அந்தப் பெண்ணின் பெயர் சரஸ்வதி."

"எப்போ நடந்தது இது ?
எதுக்காக அந்த கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?"

நண்பரிடம் விளக்கமாக நான் அதை சொன்னேன்.

ஆம்.

அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம்.

அப்போதுதான் திருச்சியில் இருந்த உயர் அதிகாரி கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து.

"சொல்லுங்க சார்" என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி.

கலாம் சொன்னார் 
அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என.

காரணம் அந்த பெண்ணின் வயது 16. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள்.
மாப்பிள்ளைக்கு 47.
இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன்.

கலாம் தொடர்ந்தார் : 
"கட்டாய கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க. அப்புறம்
அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு ஆசைப்படுது.
அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை..."

"அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியபெருமாள்.
"பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?"

ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது.

அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார்.
ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.

கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ சரஸ்வதி நன்றி சொன்னாள்.
"சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்."

"நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. அதற்கான ஏற்பாடு பண்றோம்."

சொன்னாள். கவனமாக
குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.

"ஓகே, நாங்க புறப்படறோம்.
அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்."

"என்ன சார் ?"

"உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே. 
அவருக்கு யாரும்மா இந்த தகவலை சொன்னது ?"

"நான்தான் சார்."

ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.
 "எப்படீம்மா ?"

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை.
அந்த கூட்டத்திற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள்.

பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : "உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம்.
Only four students..."

கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.

கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்து பாராட்டினார் கலாம்.
"இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்."

அந்த கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன.

எப்படியோ அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது.

இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார்.
அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.
அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.

காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?

சமீபத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி.

அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம் பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.

யார் இந்தப் பெண் ?
எங்கோ பார்த்தது போல இருக்கிறதே !

மேடையில் நின்ற அந்தப் பெண்
மூச்சு வாங்க சொன்னாளாம். "நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்."

யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்?
எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.

"கலியமூர்த்தி சார். நான் இங்கே அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன்.
மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருக்கு நான்கு லட்சம். சந்தோஷமாக இருக்கிறோம்.
நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா ?"

"தெரியவில்லை" என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி.

அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் :
"ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள். 
படிக்க வைக்கப்பட்டவள்.
நான்தான் துறையூர் சரஸ்வதி."

இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கி போகிறார்.

"உங்களுக்கும் நன்றி.
உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி."

சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கி போகிறாள் அந்தப் பெண்.

ஆச்சரியம்தான்.
அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானிய பெண் ஜனாதிபதியோடு சகஜமாக பேச முடிந்திருக்கிறது.
தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.

ஆம். 
அது ஒரு அழகிய கலாம் காலம்.

John Durai Asir Chelliah

Sunday 28 June 2020

படிக்க சில வரிகள்

சில காயங்கள் " *மருந்தால்* " சரியாகும். 
சில காயங்கள் " *மறந்தால்* " சரியாகும்.

" *ஆடம்பரம்* " அழிவைத்தரும். " *ஆரோக்கியம்* " நல்வாழ்க்கை தரும். 

கார் இருந்தால் " *ஆடம்பரமாக* " வாழலாம்
மிதி வண்டி இருந்தால் " *ஆரோக்கியமாக* " வாழலாம்.

" *வறுமை* " வந்தால் வாடக்கூடாது. 
" *வசதி* " வந்தால் ஆடக்கூடாது.

 *வீரன்*  சாவதே இல்லை. 
" *கோழை* " வாழ்வதே இல்லை.

தவறான பாதையில் " *வேகமாக* " செல்வதைவிட. 

சரியான பாதையில் " *மெதுவாக* " செல்லுங்கள்.

மனிதனுக்கு ABCD " *தெரியும்* " ஆனா *"Q"* ல போகத் "தெரியாது".

எறும்புகளுக்கு ABCD " *தெரியாது* " ஆனா *"Q"* ல போகத் "தெரியும்".

ஆயிரம் பேரைக்கூட " *எதிர்த்து* " நில். 
ஒருவரையும் " *எதிர்பார்த்து* " நிற்காதே.

தேவைக்காக கடன் " *வாங்கு* ". 
கிடைக்கிறதே என்பதற்காக " *வாங்காதே* ".

உண்மை எப்போதும் " *சுருக்கமாக* " பேசப்படுகிறது. 

பொய் எப்போதும் " *விரிவாக* " பேசப்படுகிறது.

" *கருப்பு* " மனிதனின் இரத்தமும் சிவப்புதான். 

" *சிவப்பு* " மனிதனின் நிழலும் கருப்புதான். 

 *வண்ணங்களில்* " இல்லை வாழ்க்கை. 
மனித " *எண்ணங்களில்* " உள்ளது வாழ்க்கை

" *கடினமாய்* " உழைத்தவர்கள் முன்னேறவில்லை. 

" *கவனமாய்* " உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.

வியர்வை துளிகள் " *உப்பாக* " இருக்கலாம். ஆனால், 

அவை வாழ்க்கையை " *இனிப்பாக* " மாற்றும்.

*கடனாக* இருந்தாலும்சரி,
" *அன்பாக* " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு. 

" *செலவு* " போக மீதியை சேமிக்காதே. 
" *சேமிப்பு* " போக மீதியை செலவுசெய்.

உன்னை நீ செதுக்கி கொண்டே இரு " *வெற்றி* " பெற்றால் சிலை, " *தோல்வி* " அடைந்தால் சிற்பி.

 உறவினர்களில் யார் முக்கியம் என்பதை " *உயிரற்ற* " பணமே முடிவு செய்கிறது.

கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு " *முட்டாள்* " என்று தெரியும். 

கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு
" *புத்திசாலி* " என்பது புரியும். 

பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை " *போற்றும்* ".

கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி
" *தூற்றும்* ".

பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் " *பொய்* ". 

அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே " *உண்மை* ".

மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் " *புத்திசாலி* ".

வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் " *திறமைசாலி* ".

 கவலைகள் கற்பனையானவை.
" *மீதி* " தற்காலிகமானவை.

குறைகளை " *தன்னிடம்* " தேடுபவன் தெளிவடைகிறான். 

குறைகளை " *பிறரிடம்* " தேடுபவன் களங்கப்படுகிறான்.

அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் " *உண்டு* ".
இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் " *இல்லை* "
விழுதல் என்பது " *வேதனை* ". 
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது " *~சாதனை*~ "

   #ஆனந்தம் ஆரோக்கியம்!!!

Tuesday 24 October 2017

டெங்கு காய்ச்சல் அறிகுறி

அறிகுறிகள்... திடீரென கடுமையான காய்ச்சல் (104 டிகிரி ஃபாரன்ஹீட்/ 40 டிகிரி செல்சியஸ்), அதிகமான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, கண் விழி சிவந்து, வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசுதல், உடலில் சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். இதோடு, எலும்புகளை முறித்துப்போட்டதைப்போல கடுமையான வலி எல்லா மூட்டுகளிலும் ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறிகள். உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு எப்போது? பெரும்பாலானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட ஏழு நாள்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவை ரத்தம் உறைவதுக்கு உதவக்கூடியவை. ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படலாம். என்னென்ன பரிசோதனைகள்? ஆரம்ப அறிகுறிகள் வைரஸ் நோய்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால், உடனே டெங்குவை உறுதி செய்ய இயலாது. காய்ச்சல் மூன்று நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்கு சென்று, என்.எஸ் 1 ஆன்டிஜன் (NS1 Ag) டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM ) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்தப்பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். பொதுவாக ஒருவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் வரை இருக்கும். டெங்குக் காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். எனவே, அதே நாளில் ப்ளேட்லெட் (Platelet) என்னும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit) உள்ளிட்ட பரிசோதனைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் தொடர்ந்து செய்துகொள்ள வேண்டும். என்ன சிகிச்சை? டெங்குக் காய்ச்சலுக்கு எனத் தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டாமால் ( Paracetomol) மாத்திரையும், உடன் உடல்வலியைப் போக்க உதவும் மருந்துகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்தப்பட வேண்டும். நோயுற்ற காலத்தில்... காய்ச்சல் பாதித்த காலத்தில் நோயாளி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். தடுக்க என்ன வழி? டெங்குவிலிருந்து தற்காத்துகொள்ள தடுப்பூசி எதுவும் இல்லை. கொசுக்களை ஒழிப்பது ஒன்றே வழி. கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக, வீட்டைச் சுற்றி தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள். தெருவில் தண்ணீர் தேங்கியிருந்தால், சுகாதார ஊழியர்கள் வந்து அகற்றும் வரை காத்திராமல், நீங்களே தண்ணீரை அகற்றுங்கள். குடிப்பதற்காக குடம், தண்ணீர் தொட்டிகளில் சேமித்துவைக்கும் நீரை நன்றாக கொசு புகாதபடி மூடிவைத்துப் பயன்படுத்த வேண்டும். வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்தலாம். கொசு எதிர்ப்புக் களிம்பை உடலில் பூசிக்கொள்ளலாம். கொசு விரட்டி, கொசுவலையைப் பயன்படுத்தி கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம். மனிதனின் உடலில் இருந்து வெளிப்படும் வியர்வை வாசம், சுவாசித்தலின்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, உடலின் வெப்பம் ஆகியவை கொசுக்களை ஈர்க்கும். எனவே, கை, கால் முழுக்க மறைக்கும் வகையில் ஆடைகளை அணியலாம்’’ என்கிறார் மருத்துவர் தேவராஜன். ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் பேசினோம்... ``11-ம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்தியாவில் எழுதப்பட்ட எந்த ஆயுர்வேத புத்தகத்திலும் இது பற்றி சொல்லப்படவில்லை. அதன் பிறகு `தண்டக ஜுரம்’ என்ற ஒன்றைச் சொல்கிறார்கள். இந்த ஜுரத்துக்கு குறிப்பிடப்பட்டிருக்கும் அறிகுறிகளும் டெங்குவுக்கான அறிகுறிகளும் ஒரே மாதிரி உள்ளன. மேலும், ஆயுர்வேதம் பரவக்கூடியது, பரவாதது என இரண்டு வகை ஜுரங்களைக் குறிப்பிடுகிறது. இவற்றில் டெங்கு, விஷக் கிருமிகளால் பரவக்கூடிய நோய்களின் கீழ் வருகிறது . சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மருத்துகளில்,நிலவேம்பு கஷாயம், ஆடாதோடா இலை குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்குவின் பாதிப்பில் இருந்து காக்கும். இவற்றை நாட்டு மருந்துக் கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனைப் பிரிவில் வாங்கிப் பயன்படுத்தலாம். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்து, டெங்கு வைரஸை அழிக்கும். அதேபோல, ஆயுர்வேதத்தில் காய்ச்சல் அல்லது ஒரு நோய் வந்த பிறகு ஒரு மாத்திரையே எடுத்துக்கொள்வது சிகிச்சையாக கருதப்படுவதில்லை. அந்த நோய்க்கான காரணியை அறிந்து அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்வதும் நம்மை காத்துக்கொள்வதுமே சிறந்த வழி என்கிறது ஆயுர்வேதம். இதை, `நிதான பரிவர்த்தனமேவ சிகிச்சா’ என்கிறார்கள். நிதானம் என்றால் நோய்க்காரணியை நிதானித்து அறிவது. பரிவர்த்தனம் என்றால் எப்படி நோய் பரவுகிறது என்பதற்கான காரணங்களைக் கண்டறிதல். எனவே, டெங்கு பரவக் காரணமாகும் கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பதுதான் சிறந்த வழி. டெங்கு * டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீரை எப்படி, எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?- விளக்குகிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன் * டெங்குவுக்கு ஏன் தடுப்பு மருந்துகள் இல்லை - மருத்துவர்கள் அடுக்கும் காரணங்கள் #Dengue * Dengue fever - Do's & Dont's வேறு சில வழிமுறைகள்... `வாசா குடுஜியாதி கஷாயம்’ - ரத்தத் தட்டுகளை அதிகரிக்கும். காய்ச்சலை குறைக்கும். உலகத்திலே ரத்த தட்டணுக்களை அதிகரிக்கச் சிறந்த மருந்து ஆடாதொடா. இதுதான் இந்த கஷாயத்தின் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. `சுதர்சன சூரணம்’ - இந்த மருந்தின் முக்கிய மூலப்பொருள் நிலவேம்பு. இது, மாத்திரை வடிவிலும் கிடைக்கும். நாட்டு மருத்துக்கடைகளில் கிடைக்கும். இதை சளி, இருமல் தொடங்கி எந்தக் காய்ச்சலுக்கும் பயன்படுத்தலாம். வீட்டிலேயே நிலவேம்பு கஷாயம் தயாரிக்கலாம். ஒரு கைப்பிடி நிலவேம்புடன், சிறிதளவு கோதைக் கிழங்கு, பர்ப்பாடகம், வெட்டிவேர், விளாமிச்சை வேர், சந்தனம், பேய்ப்புடல், மிளகு, சுக்கு ஆகியவற்றைச் சேர்த்து அதற்கு எட்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி, பாதியாகும் வரை கொதிக்கவைத்துக் குடிக்கலாம். இதில் பெரியவர்கள் 30 மி.லி-யும் (ஒரு அவுன்ஸ்), சிறுவர்கள் 10-15 மி.லி-யும், குழந்தைகள் 10 மி.லி-யும் கொடுக்கலாம். இதில் உள்ள அனைத்தும் நாட்டு மருத்துக் கடைகளிலேயே கிடைக்கும். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆன்டிவைரல் பண்பு கொண்டவை. இவற்றை காய்ச்சல் பாதித்திருந்தாலும், பாதிப்பு இல்லாவிட்டாலும் குடிக்கலாம்’’ என்கிறார் பாலமுருகன்.

Thursday 18 February 2016

how to record my screen

part 1


part 2


part 3
Camstudio screen recorder in tamil 

நெட்ஒர்க் பற்றிய ஓர் ஆய்வரிக்கை

நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன்
2G, E , 3G , H ,H+
Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.

 "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.
இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம்.
இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.

 "E" இதுவும் 2G(2.5G)
EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும்.
2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.
இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும்.
இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

 "3G" இது 3G மொபைல் இன்டர்நெட்
UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.

 Symbol "H" இது 3G மொபைல் இன்டர்நெட்
HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்
இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.

 "H+" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட்
(Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும்,
1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.

 "4G" இச்சேவை 4G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது.
இதன் வேகம் மிகவும் அதிகம்.
இதை இயங்க அவசியம் 4G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம்.
அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவமும் இச்சேவை வரும் என எதிர்பார்க்க படுகிறது.

ஸிகா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த தமிழர்

உலகில் முதன்முறையாக ‚ஸிகா‘ வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் ஸிகா வைரஸ், கால் பதித்துள்ளது. கர்ப்பம் தரித்த பெண்களை ஸிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும், மூளை பகுதியில் பாதிப்பு இருக்கும். பிரேசில் நாட்டில் மட்டும் இப்படி 4,074 குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதால், அங்கு பெண்கள் கர்ப்பம் அடைய வேண்டாம் என இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு அமெரிக்காவின் கொலம்பியா பகுதியில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஸிகா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 3177 பேர் கர்ப்பிணிப் பெண்கள் என்பதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இங்கு மட்டும் மேலும் 6 லட்சம் பேர் ஸிகா பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சுமார் 40 லட்சம்பேரை ஸிகா வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கினால் அதற்கு சிகிச்சையும் இல்லை. வராமல் தடுப்பதற்கு தடுப்பூசியும் இல்லை என்பதால் உலக நாடுகள் அலறுகின்றன.
உலக சுகாதார நிலையம் சர்வதேச அவசரநிலையை பிரகடனம் செய்து உள்ளது. ஒருபுறம் உலக நாடுகள் தடுப்பு மருந்துக்கான தேடுதலில் தீவிரம் காட்டி வருகின்றன. மற்ற உலக நிறுவனங்கள் ஸிகா வைரஸ் தடுப்புக்கான மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சியில் களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஸிகா வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் சர்வதேச லிமிடெட் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ‚மேக் இன் இந்தியா‘ திட்டத்தின் மிகவும் முக்கியம் வாய்ந்த நடவடிக்கையாக ஐதராபாத் ஆய்வு விஞ்ஞானிகள் உலகில் முதன்முறையாக ஸிகா வைரசுக்கு எதிராக இரண்டு விதமான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் கிருஷ்ணா எல்லா இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடையே பேசுகையில், “உலகில் முதலாவதாக ஸிகா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடித்த நிறுவனம் நாமாக இருக்கலாம், சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பே மருந்தை பாதிக்கப்பட்ட நபருக்கு செலுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது,” என்று கூறியுள்ளார்.
உலகில் ஸிகா வைரஸ் நோய்த்தொற்று தோன்றுவதற்கு முன்னதாக கடந்த ஆண்டிலேயே அதிகாரப்பூர்வமாக ‚ஸிகா‘ வைரஸ் மாதிரியை இறக்குமதி செய்து இரண்டு விதமான தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளோம். இந்த மருந்தை விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் அளித்து பரிசோதிக்க இந்திய அரசின் ஆதரவை நாடியுள்ளோம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் உதவிசெய்ய முன்வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், பாரத் பயோடெக் ‚ஸிகா‘ வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடித்து உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை நாங்கள் அறிவியலாளர்கள் கருத்தின்படி ஆய்வுசெய்ய வேண்டும், ஆய்வை மேலும் முன்நோக்கி எடுத்துசெல்லும் சாத்தியத்தை பார்க்கவேண்டும். இது ‚மேக் இன் இந்தியா‘ தயாரிப்புக்கு ஒருநல்ல உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இதுவரை ‚ஸிகா‘ வைரஸ் தாக்கம் யாருக்கும் ஏற்படவில்லை. இந்நிலையில் இந்த புதிய தடுப்பு மருந்து உலக அளவில் பெரும் வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்த ஸிகா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானியான கிருஷ்ணா எல்லா என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் அமெரிக்காவில் உள்ள ஹவாய் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பட்டம்பெற்று தாவர தடயவியலில் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார். தெற்கு கரோலினாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது, இவரை தனது தாய்நாடான இந்தியாவுக்கு திரும்பிவந்து ஏதாவது நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு கிருஷ்ணாவின் தாயார் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு எளிதில் சம்மதிக்காத கிருஷ்ணாவிடம் அவரது தாய் என்ன கூறினார் தெரியுமா..?
மகனே, உன் வயிற்றின் அளவு வெறும் ஒன்பது அங்குலம்தான். நீ எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும், அதற்குமேல் உன்னால் சாப்பிட முடியாது. நீ நம் நாட்டுக்கு திரும்பிவந்து என்ன வேண்டுமானாலும் செய். என் இறுதி மூச்சுள்ளவரை உன்னை பட்டினியாக கிடக்க விடாமல் உனக்கு சாப்பாடு கிடைக்க நான் வழி செய்கிறேன் என கூறிய கிருஷ்ணா எல்லாவின் தாயார் அவரது மனதை மாற்றினார்.
பின்னர், ஒருவித வைராக்கியத்துடன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய இவர், ஐதராபாத்தில் பாரத் பயோடெக் என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் பொருளாதார முதலீடு உள்ளிட்ட பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட கிருஷ்ணா எல்லா, இன்று 10 கோடி அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிர்வாகத்தின் தலைவராக சப்தமில்லாமல் பல சாதனைகளை செய்து வருகிறார்.
புதிய நோய்கள் உருவாவதற்கு முன்னரே அவற்றுக்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் அதிக முதலீட்டை செலவிட்டுவரும் கிருஷ்ணா எல்லாவின் தீவிர முயற்சியின் விளைவாக உலகிலேயே மிக குறைந்த விலையில் ஹெபிடைட்டிஸ் பி வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை இவரது நிறுவனம் கண்டுபிடித்தது.
போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தை தடுக்கும் சொட்டு மருந்து, ரோட்டா என்ற வைரஸால் ஏற்படும் வயிற்றுப்போக்கு நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து ஜப்பானிய என்செபாலிட்டிஸ் எனப்படும் கொசுவால் பரவும் வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தையும் இவரது தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 3.5 பில்லியன் யூனிட் போலியோ சொட்டு மருந்தை இந்த நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
உலகையே அச்சுறுத்திய சிக்கன் குன்யா நோய்க்கு காரணமான வைரஸ் கிருமி எது? என்பதை இவரது ஆய்வகம்தான் முதன்முதலாக கண்டுபிடித்தது.
தற்போது, ஸிகா நோய்க்கு எதிரான இரண்டுவகை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, ‘மேக் இன் இந்தியா’ என்ற லேபிளுடன் உலக நாடுகளுக்கு அனுப்பவுள்ள கிருஷ்ணா எல்லாவின் சாதனை முயற்சியில் அவர் வெற்றிபெற வாழ்த்த வேண்டியது, தமிழர்கள் என்ற வகையில் நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்

VERY URGENT REQUIREMENTS

                             No1 gulfjobs

          VERY URGENT REQUIREMENTS

              VERY URGENT REQUIREMENTS
                     kuwait.

  Company name; AL KHUDIDE

Please give the top priority for this request.

Ø  general lobar    - 40 Nos
Duty hours           -8+ot
Salary                  -80kd
Accommodation provided by company
 No food
Service charge     -20 without ticket only for visa
Contact; 00974  33909322

             No1gilfjobs@gmail.com

how to type in tamil

எளிமையாக உங்கள் கணினியில் தட்டச்சு செய்யலாம் 

pleas follow the video

பொட்டல் காடு

செடி ஒன்றை நட்டெடுத்து மரமாக்க
     விலை இல்லா காலமடா
அதை வெட்டி எடுத்து நிலையாக்க
    நாள் ஒன்றே போதுமடா
மலை பொழிய நெல் விலையும்
   மும்மாறி காலமடா
அது மாறித்தான் போனதற்க்கு
    நீயும் ஓர் காரணம்டா
காடுகளில் கட்டிடங்கள் நிலைகுத்தி நிக்குதடா
கலனியும் தான் பிளாட்டாகி கல்குத்தி நிக்குதடா
விலைநிலமும் எங்கே என ஓடிச்சென்று பார்கயிலே
வில் வலைவின் மூளையிலே ஏதோ கொஞ்சம் தெறியுதுடா
                                                                          By,

                                                                                                                                  mity

உயிரின் விலை பாகம் 2

இறந்தோரின் எண்ணிக்கை நாம் கனவிலும் நினைத்தப் பார்க்காத
அளவு இருந்தது ஆம் 60 மில்லியன் மக்கள் எரித்தும்,வெட்டியும்,
சுட்டும்,பல சித்திரவதைக்கு ஆலாக்கப்பட்டும் கொள்ளப்பட்டனர் 40
மில்லியன் மக்கள் உடமைகள் உறவுகள் மட்டும் இன்றி தங்களின்
உறுப்புக்களையும் சேர்த்தே இழந்தனர் அவர்களுக்கு உயிர் மட்டுமே
மிச்சம் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்ட்டிருக்கும் நேரத்தில்
ஜெர்மானியர்களின் கண்கள் ஓர் கண்டத்தை குறிவைக்கத்தொடங்கியது
அதற்க்குக் காரணம் அவர்களின் தலைமை விஞ்ஞானிகளின்

ஒருவரான மெல்போர்டு என்பவராகும் அந்த கண்டத்தில் அதிகமான வளங்கள் இருப்பதாகவும் அது தமக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும் என்பதாகவும் கூறி ஜெர்மானிய அரசை தூண்டிவிட்டார் அதை பலரும் ஏற்க்காத போதிலும் பேராசை கொண்ட ஜெர்மானிய அரசோ அதை ஆமோதித்தது ஆனால் எதிர்பாராத விதமாக இச்செய்தி அவர்களின் எதிரி நாடான பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் தூதர்கள் மூலம் தெரியவந்த்து (தொடரும்)

எமனுக்கு எமன் பாகம் 2

மீத்தேன் என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்:




மீத்தேன் என்பது ஒரு எரிபொருள் அதாவது(gas) இது பெட்ரோலை விட மலிவாகவும் 

காற்று மண்டலத்தை அதிக மாசுபடாமலும் தடுக்க முடியும் என்பது வின்ஞ்ஞானிகளின் 

கருத்தாக இருக்கிறது அந்த மீத்தேன் வாயு எவ்வாறு உறுவாகிறது என்றால் பூமுயில் 

ஏற்ப்படும் மிகப்பெறிய அழிவில் புதையூண்ட பொருட்கள் மக்கிச் சிதைவதால் 

உருவாகிறது ஒர் அழிவில் மற்றொரு தோண்றல் என்பது இங்கேயும் நிரூபணமாகிறது 

மீத்தேன் என்பது ஒர் வாயுப்பொருள் அதற்க்கு நிறமோ மனமோ கிடையாது இது 

பூமுயில் சுமார் 143 பிரில்லியன் (ஒரு பிரில்லியன் என்பது ஒருலச்சம் கோடி)கன 

மீட்டர் இருப்பதாக 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வரிக்கை கூறுகிறது ஆனால் 

இதுவரை மில்லியன் கன மீட்டர் அளவே எடுக்கப்பட்டுள்ளது 

சோவியத்யூனியன்,மெற்கு,கனடா,அமெரிக்கா,ஆஸ்த்ரேலியா,சீனா,பிரிட்டன் போன்ற 

நாடுகளே இதுவரை மீத்தேன் வளம் கொண்ட நாடுகளாக இருந்தன 1950 முதல் 

அமெரிக்காவும் 1992 முதல் பிரிட்டனும் மீத்தேன் எடுக்கத் தொடங்கியது 

அப்போதிலிருந்து குறைக்கப்படுகிறது பூமியின் ஆயுள் (தொடரும்)

Thursday 21 January 2016

எமனுக்கு எமன் பாகம் 1


அழிவின் ஆரம்பம்:

மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே 

போகிறது அதேபோல்

அவர்களின் தேவைகளும் மனிதன் என்று சொன்னால் அவன் அதிக ஆசைகளையும் தேவைகளையும் கொண்ட சுயநலவாதியாகவே திகழ்கிறான் இந்த பூமியைப் பொருத்தவரை தன் தேவைக்காக எதையும் 
செய்துவிடலாம் என்று என்னுகிறான் அதுமட்டும் அல்லாமல் தன் தேவையை குறுக்குவழியில் எவ்வாறு நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதும் மனிதற்களுக்கு நன்றாகவே தெறிந்திருக்கிறது அப்படி மனிதனுக்கு அத்யாவிசமாகத் தேவைப்படும் ஒன்றாய் மாறியிருக்கும் மீத்தேன் பற்றிதான் இப்போது நாம் பார்க்கவிருக்கிறோம்

உயிரின் விலை பாகம் 1


1941 டிசம்பர் கொடிய வெறிபிடித்த மிருகங்கள் போல் காணப்படும்
மனிதர்கள் ஆம் அது இரண்படாம் உலகப்போர் தான் உலகின்
அனைத்துப் பகுதிகளும் தீமூட்டப்பட்டு ஒரு சவக்கிடங்காய்
காட்ச்சியளித்தது இதில் அனைத்து நாடுகளும் இரு பிரிவாக பிரிந்து
தங்களின் இரத்த தாகத்துக்கு அப்பாவி மக்களையும் போர்
வீரர்களையும் கொன்றுகுவித்தனர் ஒரு பிரிவில் இத்தாலி,ஜப்பான்,
ஜெர்மன் மற்றும் அதன் நேச நாடுகளும் மற்றும்ஓர் பிரிவில் பிரிட்டன்,
பிரான்ஸ்,கெனடா,இந்தியா உட்பட அதன் துணை நாடுகளும் இணைந்து
இந்த பூமியில் இதுபோல் எந்த இயற்க்கையும் உயிர்சேதம் செய்யவே
முடியாது என்று சபதம் இடும் அளவுக்கு நடந்தேறியது இரண்டாம்
உலகப்போர் இதில் இந்தியா தேவையில்லாமல் உள்ளே

வழுக்கட்டாயமாக தள்ளப்பட்டது.(தொடரும்)

கவிதை

சாலை

கருங்கல் மேனியே கருநிரம் கொண்டு

      தொடர்ந்து நீளமாக போனியே

நீ இல்லா பயணத்தில்

      வீழ்ந்தெழுந்த எங்களுக்கு

உனை கொண்டு தந்தமைக்கு

      நன்றி பல கோடியே

அவ்வபோது மலை வெள்ளத்தில்

       நாசமானி போனியே

இதற்க்கு காரணம் அந்த

       அரசியல் ஊழல் வாதி கேடியே
                                                  By,

                                                                                         Mity

உடல் நலம்

என் இனிய நண்பர்கள் அனைவரையும் எனது உடல் நலம் பக்கம் சார்பாக வரவேற்கிறேன்

Wednesday 20 January 2016

முக்கியச் செய்தி

என் இனிய நண்பர்கள் அனைவரையும் எனது முக்கியச் செய்தி பக்கம் சார்பாக வரவேற்கிறேன்

job

என் இனிய நண்பர்கள் அனைவரையும் எனது job பக்கம் சார்பாக வரவேற்கிறேன்

android

என் இனிய நண்பர்கள் அனைவரையும் எனது android பக்கம் சார்பாக வரவேற்கிறேன்

windows

hi gays welcome to my windows page and please add 

கட்டுரை

என் இனிய நண்பர்கள் அனைவரையும் எனது கட்டுரை பக்கம் சார்பாக வரவேற்கிறேன்

கதை

என் இனிய நண்பர்கள் அனைவரையும் எனது கதைகள் பக்கம் சார்பாக வரவேற்கிறேன்

கவிதை

அன்பு நண்பர்கள் அனைவரையும் எனது கவிதைகள் பக்கம் சார்பாக வரவேர்கிறேன்